28 பிப்ரவரி, 2011

தேர்தல் வன்முறை சம்பவங்கள் 159 ஆக அதிகரிப்பு


வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இறுதி தினத்திலிருந்து இதுவரையில் நாடளாவிய ரீதியில் 159 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறை சம்பவங்களினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் 31 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் வன்முறை சம்பவங்கள் மேலும் தொடரும் நிலைமையே தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக