26 பிப்ரவரி, 2011

பான் கீ மூனிற்கும் இலங்கைக்குமிடையில் உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளனவா? இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும் ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிதி சவேந்திர சில்வாவும் சந்தித்துக் கொண்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

பான் கீ மூன் சவேந்திர சில்வாவை சந்திக்கும் முதல் முறை இதுவா? என இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்ஸ் கீ பதில் வழங்கவில்லை.

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஏதேனும் உடன் படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பேச்சாளர் ஐக்கிய நாடுகளின் செயலகத்தில் இது தொடர்பிலான விளக்கமளிப்பை பான் கீ மூன் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த மாத இறுதியுடன் பான் கீ மூனினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

ஏற்கனவே அது தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கால நீடிப்பை மேற்கொள்ளுமா? என செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய பேச்சாளர் இது தொடர்பில் குறித்த நிபுணர் குழு தீர்மானித்த பின்னர் தமக்கு அறிவிக்கும் என பேச்சாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் அதனை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக