26 பிப்ரவரி, 2011

இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளை இலங்கையர் மூவர் கைது

இத்தாலி நாட்டில் ஆயுத முனையில் கொள்ளையொன்றில் ஈடுபட்ட இலங்கையர் மூவர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நடுத்தர வயதில் இருக்கும் இலங்கையர் இருவரும், இளைஞர் ஒருவரும் சேர்ந்தே ஆயுத முனையில் கொள்ளையடிக்க முயன்று மாட்டிக் கொண்டுள்ளதாக இத்தாலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

மூவரும் சேர்ந்து ஆயுதங்களுடன் பார்மசி ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிப் பெருந்தொகைப் பணத்தைக் கொள் ளையடிக்க முயன்ற போதே வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக