28 பிப்ரவரி, 2011

பாதுகாப்புத் தொடரணி வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

பொலிஸ் ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி, பின்னர் வீதியோரத்திலிருந்த கடையொன்றிலும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் மூவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெல்மதுளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கதிர்காமம் பிரதேசத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சேவா வனிதா பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த பொலிஸ் வாகனமே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி பொலிஸ் ஜீப் பெல்மதுளை, சன்னஸ்கம பிரதேசத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதுடன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியோரத்திலிருந்த கட்டிடங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். காயமடைந்த 3 பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்கள் இருவரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக