25 பிப்ரவரி, 2011

கடலுக்கு குளிக்க சென்ற களுவாஞ்சிக்குடி மாணவன் மரணம்







பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி களுவாஞ்சிக்குடி கடலில் குளிக்கச் சென்ற கோபாலரத்தினம் ரவிகுமார் (வயது 18) என்ற க. பொ. த (சா/த) வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி நேற்று காணாமல் போயுள்ளார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் மீனவர்களும் சடலத்தைத் தேடும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எட்டுப் பேர் டியூசன் செல்வதாகக் கூறி களுவாஞ்சிக்குடி கடலுக்கு நேற்று குளிக்கச் சென்றுள்ளனர்.

குளித்துக்கொண்டிருந்தபோது குறிப்பிட்ட மாணவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக