28 பிப்ரவரி, 2011

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறல் எல்லை தாண்டினால் படகு உரிமம் ரத்தாகுமென இந்தியா எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்வதாக யாழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக யாழ். மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தார்.

எனினும், முன்னர்போன்று அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது சற்றுக் குறைவடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் எரி பொருள் மானியம், படகு உரிமம் என்பன இரத்துச்செய்யப்படும் என இந்தியக் கடற்படையினர் எச்சரித்து ள்ளனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதா பட்டினத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்தியக் கடல் எல் லையைத் தாண்டிச் சென்றுள்ளனர். இதனை ராடர் கருவிகள் மூலம் கண்காணித்த இந்தியக் கடற் படையினர் எல்லைதாண்டிய மீன் பிடிப் படகுகளின் உரிமையாளர் களை அழைத்துப் பேச்சுவார்த்தை யொன்றை நடத்தியிருந்தனர்.

இந்தியக் கடற்படை கொமா ண்டர் பிஜாரானியா தலைமையில் இந்தியக் கடற்படைத் தளத்தில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றதா கவும், எல்லைதாண்டும் மீனவர்க ளுக்கு அரசாங்கத்தால் வழங்கப் படும் எரிபொருள் மானியம், படகு உரிமம் என்பன இரத்துச்செய்ய ப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள் ளதாகவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக