28 பிப்ரவரி, 2011

எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் நவீனமயப்படுத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி இதர தரப்பிற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் நவீனமயப்படுத்தப்படும் என்று பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் பெற்றோலியத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மீண்டும் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக்கப்பட்ட 107 எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் நவீனமயப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட ஏற்பாடுகளின் பிரகாரம் பிணையாளர்கள் வசம் இருக்கின்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கும், அதற்காக அவர்களுக்கு நிதிவசதிகள் தேவையேற்படின் அதனை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக