24 பிப்ரவரி, 2011

துரோகிகளை உருவாக்கும் இடங்களாக சிறைச்சாலைகள் இருக்கக் கூடாது

* சிறை முறைகேடுகளை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு

* 88 வீதமானோர் தூக்குத்தண்டனைக்கு வலியுறுத்தல்சமூகத் துரோகிகளை உருவாக்கும் இடங்களாக சிறைச்சா லைகள் இருக்கக் கூடாது என தெரிவி த்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறைச் சாலைகளில் இடம் பெறு கின்ற முறை கேடு களைக் கட்டுப்படுத்து வதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குற்றவாளிகள் நல்வழிக்குக் கொண்டுவரப்பட வேண்டுமேயொழிய அவர்கள் சமூகத்தின் மீது குரோதம் மிக்கவர்களாக உருவாகக் கூடாது.

குற்றவாளிகளை சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியவர்களாக மாற்றியமைக்கும் முறையை வலுப்படுத்த வேண்டும். இதனூடாக நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியவர்கள் உருவாகுவார்கள். சிறைகள் சமூகத் துரோகிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் இடங்களாகத் திகழ வேண்டும். மாறாக திருடர்களையும், கொள்ளைய ர்களையும் உருவாக்கும் இடங்களாக இருக்கக் கூடாது.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட தடுப்புக்காவல் கைதிகள் வரையான சகலரும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் செயலாற்றும் வகையில் பொருத்தமான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இக்கூட்டத்தின் போது ஆலோசனை வழங்கினார்.

இதேநேரம், சிறைகளில் இடம்பெறுகின்ற முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக விஷேட பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறும், சிறைக் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக விசேட வேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி னார்.

இப்போது சிறைக் கைதிகள் எவரும் நாட்டின் பொருளாதாரத்திற்கு எதுவிதமான பங்களிப்பையும் செய்வதில்லை. ஆனால் அரசாங்கம் ஒரு சிறைக்கைதிக்கு மாதத்திற்கு 9000 ரூபா முதல் 10,000 ரூபா வரை செலவிடுவதாக இக்கூட்டத்தின்போது சுட்டிக் காட்டப்பட்டது.

அதேநேரம் குற்றவாளிகளை சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியவர்களாக மாற்றியமைக்கும் முறைமையின் கீழ் கடந்த சில வருடங்களுக்குள் 405 மில்லியன் ரூபாவை மீதப்படுத்த முடிந்ததாகவும் இக்கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வின் படி இலங்கையில் 88 சதவீதமானவர்கள் தூக்குத் தண்டணை முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளனர்.

மரண தண்டனை செயற்படுத்தப்படாத தால் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கொலை குற்றங்களுடன் தொடர்புடைய 334 பேர் விசேட கவனிப்புடன் சிறையில் இருக்கின்றார்கள்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக