26 பிப்ரவரி, 2011

களுத்துறை கடலில் மூழ்கி பிரான்ஸ் பிரஜை பலி






களுத்துறை கடலில் நீராடச் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். வடக்கு களுத்துறை ஹோட்டலொன்றில் தங்கியிருந்த இவர், ஹோட்டலுக்கு பின்பக்கமாக உள்ள கடலில் நீராடிய போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 52 வயதான சார்ள்ஸ் ரொபட் என்பவரே இவ்வாறு இறந்துள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின்னர் இவரின் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

இறந்தவரின் சடலத்தை பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக