26 பிப்ரவரி, 2011

2015ம் ஆண்டுக்குள் பால்மா இறக்குமதி முற்றாகத் தடை * மாற்றுத் திட்டங்கள் தயாரிப்பு

உள்ளூரில் தன்னிறைவு காணும் திட்டம் இறக்குமதிச் செலவு தினமும் 2 மில். டொலர்2015ம் ஆண்டிற்குள் பால் மா இறக்குமதி முற்றாகத் தடைசெய்யப்படுமென மில்கோ நிறுவனத் தலைவர் சுனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய அதற்கான மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்து அவற்றில் தன்னிறைவு காணும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு பால் மா இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு வருகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டுமென தெரிவித்த அவர், 2015ம் ஆண்டிற்குள் பால்மா இறக்குமதி முற்றாக நிறுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற மெளபிம லங்கா மன்றத்தின் சூரியசிங்க சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மில்கோ நிறுவனத் தலைவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :

உலகில் பெருமளவிலான நாடுகள் தமது உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளன. அவுஸ்திரேலியா போன்ற

பால் உற்பத்தி நாடுகள் தற்போது பால் மாவைத் தவிர்த்து பசும் பாலை உபயோகத்திற் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளன. எமது நாட்டிலும் பசும்பாலை முழுமையாக பாவனைக்குக் கொண்டுவரும் நிலை விரைவில் உருவாக்கப்படும் எனவும் அவர் மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக