26 பிப்ரவரி, 2011

பொன்சேகாவின் எம்.பி. பதவி நீக்கத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு



முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா தனது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கியதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு மே மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதியரசர்களான ரஞ்சித் சில்வா, ஏ.டபிள்யூ ஏ. சலாம், உபாலி அபேரட்ண ஆகியோரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் மேன்முறையீட்டு மனுவினை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என சட்டமா அதிபர் ஆட்சேபம் தெரிவித்த போதிலும், நீதியரசர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்ததுடன் வழக்கினை விசாரிப்பதற்கான திகதியினையும் அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக