28 பிப்ரவரி, 2011

விமானப்படைத் தளபதியாக எச்.டி.அபேவிக்ரம பதவியேற்பு




இலங்கை விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.டி.அபேவிக்ரம இன்று திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்தில் இந்த பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு முன்னர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக விமானப்படை தளபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

எச்.டி. அபேவிக்ரம கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி விமானப்படையில் இணைந்த இவர் 30 வருட அனுபவம் வாய்ந்தவராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக