28 பிப்ரவரி, 2011

235 சபைகளுக்கு குறிப்பிட்ட திகதியில் தேர்தல்: 22க்கு பின் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தேர்தலின் பின் பரிசீலனை


235 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் குறிப்பிட்ட அதே தினத்தில் நடைபெறும் என வும் எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக் கான நியமனப் பத்திரம் தொடர்பாக 22ம் திகதிக்கு பிறகு தாக்கல் செய்யப் பட்ட வழக்குகள் தேர்தல் நடைபெற்றதன் பின்னரே பரிசீலிக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களம் சுயாதீனமற்ற முறையில் சில கட்சி களுக்கு சார்பாக செயற் படுவதாகவும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றது என்ற கருத்தை ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பியினர் கூறும் போலியான கூற்றுக்களை முற்றாக நிராகரிப்பதாக தேர்தல்கள் செயலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.

தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல்கள் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படு கின்றார்.

எதிர்காலத்திலும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினம் மார்ச் மாதம் 8-9 ம் திகதிகளில் நடைபெறுவதற்காக விண்ணப்பங்கள் இம்மாதம் 25ம் திகதி அனுப்பப்பட்ட தாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் சட்டம் தொடர்பாக சகல கட்சிகளின் செயலாளருக்கும் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பாகவும் அதன் பின்னரும் கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளளோம். எனினும், 35 க்கு குறைந்த வயதுடைய இளைஞர்கள் தொடர்பாகவும் தேர்தல் சட்டம் தொடர்பாகவும் பல தடவைகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளோம். அவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் சில கட்சிகளுக்கு சார்பாக செயற்படுகின்றாரென்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாததென அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக