29 அக்டோபர், 2010

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 5 பேர் காயம்


வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் வியாழக்கிழமை காலை 8.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் காயமடைந்தனர்.

இது ரிக்டர் அளவுகோளில் 5.7 அலகுகளாக பதிவானது. பாகிஸ்தான் நாட்டின் கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரியவந்துளளது.

பெஷாவர், மர்தான், நெüஷெரா, ஹரிப்பூர், ஸ்வாட், திர், பலகோட், மான்ஷெரா, அபோட்டா பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கும், தஜிகிஸ்தானுக்கும் இடையே 280 கிலோமீட்டர் வடமேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக