30 அக்டோபர், 2010

போலி ஆவணங்களுடன் இலங்கை செல்ல முயன்றவர் சென்னையில் கைது

போலி ஆவணங்கள் மூலம் இலங்கை செல்ல முயன்றவர் மற்றும் அவருக்கு உதவிய முகவர் ஆகியோரை சென்னை பொலிசார் கைது செய்தனர். இவர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் சிவிதரன்(29). கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து சுற்றுலா விசா மூலம் சென்னைக்கு வந்தார். விசா காலம் முடிந்தும், அவர் சென்னையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலி ஆவணங்கள் மூலம் மீண்டும் இலங்கை செல்ல சென்னை விமானம் நிலையம் சென்றார்.

அங்கு அவரை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்த போது, காலக்கெடு முடிந்து, 'ஓவர் ஸ்டே' முறையில் சென்னையில் தங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும், அவரிடம் விசாரித்ததில் சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற முகவர் தான் போலி ஆவணங்கள் தயார் செய்து இலங்கை செல்ல உதவினார் எனக் கூறினார்.

இதையடுத்து, வழியனுப்ப விமான நிலையத்தில் காத்திருந்த ஜெயக்குமாரை, விமான நிலையப் பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து, இவ்வழக்கு புறநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக