30 அக்டோபர், 2010

ஹைகோப் ஆயுத ஊழல்: இரண்டாவது பிரதிவாதிக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஹைகோப் நிறுவன ஆயுத ஊழல் வழக்கில் 2வது பிரதிவாதிக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவின் ஹை கோப் நிறுவ னத்தின் ஊடாக ஆயுத ஊழலில் ஈடுபட்டதாக கூறி சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இரண்டாம் பிரதிவாதியாகிய ஹைகோப் நிறுவன பணிப்பாளர் வெலிங்டன் டீ ஹோட்டுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

தமது குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கின் பிரதான பிரதிவாதியாகிய தனுன இன்னும் தலைமறைவாகியுள்ளார். சரத் பொன்சேகா இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனைத் தவிர சரத் பொன்சேகாவின் உதவியாளராக செயற்பட்ட சேனக சில்வாவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சேனக டி சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக