30 அக்டோபர், 2010

கொரிய மொழிப் பரீட்சை இன்று; குறுந்தகவல் மூலம் மோசடி முயற்சி ஒரு சிம்காட்டின் விலை ரூ. 25,000க்கு மேல்

தென்கொரிய வேலைவாய்ப்புக்காக இன்றும் நாளையும் நடத்தப்படும் எழுத்து மூலமான பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு இரகசியமாக குறுந்தகவல் அனுப்புவதற்காக 25,000 ரூபாவுக்கும் அதிக தொகையில் பெருந்தொகையான சிம்கார்ட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இம்முறை சுமார் 700 பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இன்றும் நாளையும் கொழும்பில் 13 பரீட்சை நிலையங்களில் 493 பரீட்சை மண்டபங்களில் 29,300 பேர் கொரிய பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

493 மண்டபங்களிலும் 493 பொலிஸார் கடமையில் ஈடுபடுவர். உள்நுழைவாயிலில் 15 பேர் வீதம் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள். பரீட்சை மண்டபத்துக்குள் செல்லும் பரீட்சார்த்தி முழுமையான சோதனைக்குட்படுத்தப்படுவார். கையடக்க தொலைபேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்.

காலை 8.30 மணி முதல் 11.45 மணிவரை நடைபெறும் இப்பரீட்சையின் போது கடமையிலீடுபட்டிருக்கும் பொலிஸாரும் கையடக்க தொலைபேசிகளை உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸாரும் காலை 7.30க்கே

பரீட்சை நிலையங்களுக்கு கட மைக்கு வருவர். பரீட்சையின் போது மோசடி யிலீடுபடும் நபர்களை கண்டுபிடிக்கும் பொலிஸாருக்கு பணியகம் பரிசுகளையும் வழங்கும் என பணியகத்தின் தலைவர் தெரி வித்தார்.

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப் புக்காக ஆட்களை அனுப்பும் நாடு களில் 2004 ஆம் ஆண்டு இலங்கை 13 ஆவது இடத்தில் இருந்தது.

இப்போது மூன்றாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்த இடத்திலிருந்து முதலாவது இட த்தை அடைவதே எமது இலக்கு.

மோசடியற்ற விதத்தில் வேலை வாய்ப் புக்காக ஆட்களை அனுப் பும் போது, எமக்கு முதல் இட த்தை வெகுவிரைவில் எட்ட முடி யும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக