30 அக்டோபர், 2010

பிரிட்டன் - டுபாய் விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

பிரித்தானியா மற்றும் டுபாய் விமான நிலையங்களில் நேற்று வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை நோக்கி பயணிக்கவிருந்த இரண்டு சரக்கு விமானங்களிலேயே இவ்வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யேமன் நாட்டிலிருந்தே இவ்விரு விமானங்களும் புறப்பட்டுள்ளன.

அமெரிக்க சிக்காகோ நகருக்குச் செல்லும் இவ்விரு விமானங்களும் பிரித்தானியா மற்றும் டுபாயிலும் தரை இறங்கியுள்ளன.

பிரித்தானிய புலனாய்வு சேவையான எம்.ஐ6 இற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவை இரண்டும் அச்சிடும் உபகரணத்தில் (பிரிண்டர்) உபயோகிக்கப்படும் ' பிரிண்டர் காட்ரிஜ் ' இல் வைத்து பொதி செய்யப்பட்டுள்ளன.

மேற்படி வெடிகுண்டுகள், அமெரிக்காவிலுள்ள யூத மத வழிபாட்டுத்தலங்களை குறி வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அல்-கொய்தா தீவிரவாதிகள் பலம் பொருந்திய முக்கிய நாடுகளில் ஒன்றாக யேமன் கருதப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக