31 அக்டோபர், 2010

ஜனாதிபதி மஹிந்த சீனப் பிரதமரை சந்தித்து பேச ஏற்பாடு

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் ‘எக்ஸ்போ 2010’ இல் கலந்துகொள்ள சீனா சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனப் பிரதமர் வென்ஜியாவோ வுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட சீனாவின் உதவியுடன் இலங்கையில் முன் னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் பற்றி யும், இருதரப்பு உறவுகள் பற்றியும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படு மென ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவுடன் நேற்று முன்தினம் சீனாவுக்குப் பயணமாகியிருந்தார்.

நாளைய தினம் நாடு திரும்ப முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேபாள ஜனாதிபதியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக