27 அக்டோபர், 2010

பவளப்பாறைகளை முறையாக பேண இலங்கை அரசு நடவடிக்கை ஜப்பான் கூட்டத்தில் அஸ்வர் எம்.பி.

இலங்கையில் பவளப் பாறைகளை முறையாக பேணு வதற்கு உகந்த நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் பவளப்பாறைகள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைபற்றி ஆராயும் கூட்டம் ஜப்பானின் நாகோயா நகரில் உள்ள நாகோயா மேரியட் அஸோஸியா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஸ்திரமான மீன்பிடி கைத்தொழி லையும், நீர்வள முகாமைத்துவத்தையும் அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். பவளப் பாறை முகாமைத்துவமும் இதில் அடங்குகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான மஹி ந்த சிந்தனை என்ற தனது கொள்கை பிரகடனத்தில் ஸ்திரமான பவளப் பாறை மற்றும் நாளைய கடல் வாழ் முகாமைத்துவம் தொடர்பான வழிமுறைகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ள தாக பாராளுமன்ற உறுப்பினர் அஸ் வர் விளக்கிக் கூறினார்.

அந்தத் தேர்தலில் ஜனாதிபதி 60 சதவீத அமோக வாக்குகளுடன் வெற்றியீட்டினார். இதில் பெரும் பாலான வாக்குகள் கரையோர மக்களிடம் இருந்து கிடைத்தவையா கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னர் மீன்பிடித்துறை அமைச்ச ராக இருந்தபோது கடல்சார் பல் கலைக்கழகமொன்றை ஸ்தாபித்தது பற்றியும் பல்கலைக்கழக மட்டத்தில் கடல் நிபுணத்துவ பட்டப் படிப் பினை வழங்கும் ஒரேநாடு இல ங்கை என்பது பற்றியும் பாராளு மன்ற உறுப்பினர் அஸ்வர் அங்கு குறிப்பிட்டார்.

பவளப்பாறை முக்கோண செயற் பாடு மற்றும் கடலில் பாதுகாக் கப்பட்ட பிரதேசங்கள் ஆகியவை தொடர்பாக எதிர்காலத்தில் இடம் பெறும் சர்வதேச கருத்தரங்குகளில் இலங்கையை சேர்த்துக்கொள்வது முக்கியமானது என்பதை அவர் இக் கூட்டத்தில் வலியுறுத்திக்கூறினார்.

அத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட உலகளாவிய சட்டமன்ற உறுப் பினர்களுக்கு மஹிந்த சிந்தனை கொள் கைப் பிரகடனத்தின் ஆங்கில பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக