28 அக்டோபர், 2010

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் இறைக்கும் இயந்திரங்கள் கையளிப்பு

மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தலைமையாகக் கொண்ட குடும்பப் பெண்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக மன்னார் சுகவாழ்வு மன்றத்தினால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் இன்று காலை வழங்கிவைக்கப்பட்டது.

கிராம சேவையாளர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கே மேற்படி உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

சுகவாழ்வு மன்றத்தின் இயக்குனர் ஜீவன் அமரசிங்க தலைமையில், சுகவாழ்வு மன்றத்தின் சிரேஷ்ட முகாமையாளர் டி.எஸ்.பல்பொல மற்றும் சுகவாழ்வு மன்ற அதிகாரி உமா ராஜலஷ்மி ஆகியோர் மாந்தை மேற்குப் பகுதிக்குச் சென்று வழங்கி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக