31 அக்டோபர், 2010

இலங்கை தமிழர்கள் தாய்லாந்தில் கைது


பாங்காக்: தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் புலிகள் உடனான உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வந்ததை அடுத்து, அந்த நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் பெற முற்பட்டுள்ளனர். இந்நிலையில், தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்க்லா பகுதியில், போலீஸ் அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் இலங்கைத் தமிழர்கள் 114 பேர் பிடிபட்டனர். அவர்களில் சிலரிடம், முறையான பயண ஆவணங்கள் இருந்ததால் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்கள் போக, இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர். விசா காலத்திற்குப் பிறகும் அதிக நாட்கள் தங்கியிருந்தது, சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் வந்தது போன்ற குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக