27 அக்டோபர், 2010

பின்தங்கிய கிராமங்களுக்கு துரித மின் வழங்கும் விசேட திட்டம்



பின்தங்கிய கிராமங்களுக்கு துரிதமாக மின்சார வசதி செய்து கொடுக்கவென விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு ள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள சகலருக்கும் மின்வசதி செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் வெளிநாடுகளின் கடனுதவிகளுடன் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தின் படி 2012 ல் சகலருக்கும் மின்சார வசதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ‘கிராம சக்தி’ திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

மின் கம்பங்கள் மூலம் மின்சார வசதி அளிக்க முடியாத சிறிய கிராமங்கள் மற்றும் வீடுகளுக்கு தகுந்த வழி வகைகளினூடாக மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி, சிறு மின் திட்டங்கள், காற்று மூலமான மின் திட்டம், எரிவாயு தொழில்நுட்பம் போன்ற முறைகளினூடாக இந்த கிராமங்களுக்கு மின்சார வசதி அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு ள்ளதோடு வசதி குறைந்த மக்களுக்கு நிவாரண அடிப்படையில் மின்சார இணைப்பு வழங்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு கூறியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக