31 அக்டோபர், 2010

இலங்கையை சேர்ந்த 61 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தாய்லாந்து அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தாய்லாந்தின் தென் மாகாணத்தில் உள் சொங்ஹாலா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு நடவடிக்கையின் போது 114 பேர் .கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். தமது வீசா காலவதியான நிலையில் இபர்கள் கைது செய்யப்பட்டதாக சொங்காலா பிராந்திய குடிவரவு பாதுகாப்புத் துறை தலைவர் தலைவர் புட்திபோங் குசிக்குள் இதனை தெரிவித்துள்ளார்.

கைது அனைவரும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு சட்ட விரோதமாக தப்பி செல்வதற்கு முயற்சித்து வந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மாதத்தில் மட்டும் தாய்லாந்து அதிகாரிகளினால் இப்பாரு சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 128 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக