27 அக்டோபர், 2010

மத்தல விமான நிலைய பணிகள் துரிதம்: 2012 இல் முதல் விமானம் தரையிறக்கம்; 5000 கொள்கலன்களுக்கு களஞ்சிய வசதி


மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கான 3 1/2 கிலோ மீட்டர் நீளமான ஓடு பாதைக்கான நிலத்தை சுத்திகரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு 40 மீட்டர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம், தீயணைப்புப் படை மற்றும் பாதுகாப்பு அலுவலகம் என்பவற்றை நிர்மாணிக்கும் பணிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக துறைமுகங்கள் விமான சேவை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

2012 ஆம் ஆண்டு பிற்பகுதியில் முதலாவது விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் எனவும் அவர் கூறினார்.

மத்தல சர்வதேச விமான நிலைய பணிகள் குறித்து ஆராய்வதற்காக அங்கு சென்ற பிரதிஅமைச்சர் மேலும் கூறியதாவது, விமான நிலையப் பணிகள் எதிர்பார்த்ததை விட துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கட்டுநாயக்க விமான நிலையப் பணிகள் இரட்டிப் பாகியுள்ளன. இந்த நிலையில் மத்தல விமான நிலைய பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்கு 6 வழிகளை கொண்ட அதிவேகப் பாதை நிர்மா ணிக்கப்படுகிறது. சுற்றுச் சுழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விமான நிலையம் அமைக்கப்படுவதோடு யானைகள் மற்றும் விலங்குகளை வேறு இடங்களுக்கு அனுப்பாமல் இப்பகுதியி லேயே வசதிகள் அளிக்கவும் திட்ட மிட்டுள்ளோம்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் விமான நிலையமும் துறைமுகமும் அமைக்கப்படுகி ன்றன. இவை குறித்து விமர்சித்து எதிர்க் கட்சிகளுக்கு இங்கு வந்து உண்மை நிலையை நேரில் பார்க்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். தேவையானவர் களுக்கு துறைமுகத்தில் இறங்கிக் குளிக்கவோ நீந்தவோ முடியும் என்றார். விமான மற்றும் விமான நிலைய சேவை நிறுவனத் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய கூறியதாவது;

ஓடுபாதையின் 65 வீதமான பணிகள் 2011 நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும். 10 விமானங்கள் நிறுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படுகிறது. 5000 கொள்கலன்களுக்கு வசதி அளிக்கக் கூடியதாக களஞ்சிய வசதிகள் செய்யப்பட உள்ளதோடு 300 வாகனங்கள் நிறுத்த தரிப்பிட வசதி அளிக்கப்படும்.

விமான நிலையம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் 1500 பேர் நேரடி தொழில் வாய்ப்பு பெற உள்ளதோடு 50 ஆயிரம் பேர் மறைமுகமாக தொழில் வாய்ப்பு பெறுவர். நவீன வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படும் இந்த விமான நிலையத்தின் மூலம் தினமும் 3200 பயணிகள் பயனடைவர். வருடத்துக்கு 10 இலட்சம் விமானப் பயணிகள் இதனை பயன்படுத்துவர். அமைச்சின் செயலாளர் ரஞ்சித் த சில்வா இதனூடாக பல நாட்டு விமான ங்கள் இதனைப் பயன்படுத்த உள்ளதோடு புதிதாக விமானங்களைக் கொள்வனவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக