31 அக்டோபர், 2010

பல்கலைக்கழகங்களில்;: சட்டத்துக்கு மாறாக செயற்பட்டால் கடும் நடவடிக்கை

பல்கலைக்கழக விடுதிகளை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வெளியாருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்களின் விடுதி கடந்த இரண்டு வருடங்களாக ஆண் மாணவர்களால் பலவந்தமாகப் பயன் படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஜே.வி.பி. மாணவர் களின் தலையீட்டைத் தொடர்ந்து பல் கலைக்கழக நிர்வாகமும் விடுதியை ஆண் மாணவர்களுக்கு வழங்கிவிட்டது. அவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு ஜே.வி.பி. வெளி மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்தது.

அவ்வாறு அனுப்பப் பட்ட வெளி மாணவர்க ளில் சிலர் பல்கலைக் கழகத்தை முடித்து வெளியேறியவர்கள், சிலர் பல்கலைக்கழகத் துக்குத் தகுதி பெறாதவர்கள் இவர்களாலேயே பல்கலைக்கழகம் நெறிப்படுத்தப்பட்டது. இந்த சக்திகளை நாம் அடையாளம் கண்டு நீக்கிவிட்டோம். தற்பொழுது பல்கலைக் கழகம் 90 வீதம் சரியான முறையில் செயற்படுகிறது.

இதுவரை காலமும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து இடைநிறுத்தப் படுகின்ற போது, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை. இனிமேல் அவ்வாறில்லை சட்டத்துக்கு விரோதமாகச் செயற்படும் மாணவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

நாட்டின் உயர் கல்வித் துறையில் அரசாங்கம் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரும். பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாக கல்வியைத் தொடரும் சூழலை ஏற்படுத்துவோம்.

தேவையற்ற விடயங்களில் ஈடுபட்டு மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணடித்துவிடக்கூடாதென அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக