30 அக்டோபர், 2010

சிகரட்,மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் சிகரட் மற்றும் மதுபானங்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள் ளன. அதன்படி விற்பனை செய்யப் படுகின்ற அனைத்து வகை சாராயத் தினதும் விலைகள் அதிகரிக்கப்பட் டுள்ளன.

சாராயத்தின் விலைகள் 15 முதல் 20 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஒரு போத்தல் பியரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அனைத்து வகை யான சிகரட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட்டின் விலைகள் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக