27 அக்டோபர், 2010

நாடெங்கும் போதைவஸ்து வேட்டை; இரு வாரங்களில் 7098 பேர் கைது 7927 கிலோ போதைப்பொருள் மீட்பு






நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக நடத்தப்பட்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 7098 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடத்தப்பட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 7050 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதுடன் 7927 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை மீட்டெடுத்துள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின் போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட் களையே பொலிஸார் கைப்பற்றியு ள்ளனர்.

ஆயிரக்கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் விசேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கஞ்சாவுடன் தொடர்புடைய 4413 சம்பவங்கள், ஹெரோயி னுடன் தொடர்புடைய 1858 சம்பவங்கள், பாபுலுடன் தொடர்புடைய 305 சம்பவங்கள், போதை தரும் லேகியங்களுடன் தொடர்புடைய 413 சம்பவங்கள், அபினுடன் தொடர்புடைய 3 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு

அமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட்டலின் கீழ் விசேட நடவடிக்கை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. தற்போது இந்த நடவடிக்கைகள் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களம் இதற்கான விசேட வேலைத் திட்டங்களை தீட்டியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட் டுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டிலுள்ள 12 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் வழிகாட்டலில் 36 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு எதுவித பாரபட்சமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக