28 ஜூலை, 2010

ஏ-9 வீதியில்இரு மருங்கிலும் பனைமரத்து விதை நடுவதற்குத் திட்டம்





முகமாலை முதல் வவுனியா வரையுள்ள ஏ – 9 வீதியின் இரு மருங்கிலும் பனம் விதை நடப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

ஐந்து லட்சம் பனைவிதை நடுகைத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே ஏ – 9 பாதையின் இரு மருங்கிலும் பனை விதைகள் நடப்படவுள்ளதுடன் வீதிகளின் இரு மருங்கில் உள்ள வெறும் காணிகள் மற்றும் பாடசாலைகளின் மைதானங்களைச் சுற்றியும் விதைக்கப்படவுள்ளன. யுத்த காலங்களில் பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டமையும், அத்துடன் முன்னர் திட்டமிடாத முறையில் பனம் விதைகள் விதைக்கப்பட்டமையினால் அம்மரங்கள் அழிக்கப்பட்டமைக்காகவும் இவ் விதைகள் விதைக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக