28 ஜூலை, 2010

35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர் அமைச்சர் கெஹலிய

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 35,333 பேர் மாத்திரமே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கும் அமைச்சரவைக்குமான பேச்சாளர்- தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாளாந்தம் சுமார் 700 பேர் சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் பதிவு செய்யப்பட்ட தொகை 267,393 எனக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களுள் முழுமையாக 2,30,000 பேர் ஒரு வருடகாலத்தினுள் மீள்குடியமர்த்தப்பட்டு ள்ளதாக குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் வழங்கிய அமைச்சர் ரம்புக்வெல்ல, “15 இலட்சத்திற்கும் அதிக மான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதில் சட்டச் சிக்கல் உள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ளதாக ஐ.நா. சான்றுபடுத்தாமல் குடியமர்த்த முடியாது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமக்கு உதவி வழங்க முன்வந்தன. என்றாலும் அது தாமதம் ஏற்பட்டதால், அரசாங்கமே 860 மில்லியன் ரூபாவை செலவு செய்து கண்ணி வெடிகளை அகற்றியது. இலங்கை இராணுவம் 275,000 கண்ணிகளை அகற்றியுள்ளது. இராணுவத்தின் துரித நடவடிக்கையால் இது சாத்தியமாகியுள்ளது” என்றும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக