26 ஜூலை, 2010

மன்னாரில் மாவட்டத்தில் மீள் குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்கிறது





மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மீனவ கிராம மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருவதோடு அவர்களுக்கான தொழில்துறை உபகரணங்களும் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட கடற் தொழில் உதவிப் பணிப்பாளர் சந்திர சேகரப் பிள்ளை பவாநிதி தெரிவித்தார்.

இந்நிலையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்;ட அரிப்பு, சவேரியார் புரம், சிலாபத்துறை, கூலாங்குளம், கொக்குப்படையான், கொண்டச்சி குளம் ஆகிய 6 கிராமங்களிலும் 693 குடும்பங்களும், மாருதை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மோட்டை, விடத்தல் தீவு, கந்தாலன் பிட்டி, இலுப்பக் கடவை, அந்தோனியார் புரம், 3ஆம் பிட்டி, தேவன் பிட்டி ஆகிய 7 மீனவர் கிராமங்களிலும் 878 குடும்பங்கள் மீள்; குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கடற்தொழில் நீரியல்வள அமைச்சினால் கடற்தொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக