29 ஜூலை, 2010

வாகரையில் 70 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது போது இடம்பெயர்ந்து கதிரவெளி,சித்தாக்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான் போன்ற பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 5 வருடங்களின் பின்னர் இவர்கள் தோணிதாண்டமடு கிராமத்தில் இன்று மீள்குடியமர்த்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கதிரவெளியிலிருந்து இன்று காலை புறப்பட்டுச்சென்ற இவர்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேசசெயவாளர், படையதிகாரிகள் உட்பட கலர் கலந்து கொண்டு வழியனுப்பிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக