28 ஜூலை, 2010

இ. போ. ச. வின் நாளாந்த வருமானம் ரூ. 4 கோடிக்கு அதிகம்



மே மாதம் முதல் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டுவரும் நாளாந்த வருமானம் அதிகரித்து வருவதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.

இ. போ. ச. வை முன்னேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே இ. போ. ச. கூடுதல் வருமானம் ஈட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

மே மாதம் இ. போ. ச. வின் ஒருநாள் வருமானம் 3 கோடி 87 இலட்சத்து 81 ஆயிரத்து 102 ரூபா. ஜுன் மாதமாகும் போது அந்தத் தொகை 4 கோடி 9 இலட்சத்து 68 ஆயிரத்து 896 ரூபாவாக அதிகரித்தது.

தற்பொழுது 4 கோடி 17 இலட்சத்து 69 ஆயிரத்து 131 ரூபா வருமானம் ஈட்டப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக