28 ஜூலை, 2010

நுகர்வோர் அதிகார சபைக்கு இம்மாத வருமானம் 26,85,500 ரூபா

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காக இம்மாதம் 1ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 26 லட்சத்து 85ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல்களை காட்சிப்படுத்தாமை, சட்டத்துக்கு முரணான வகையில் பொருட்களை விற்பனை செய்தமை, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக இந்த அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபை சோதனைகளை நடத்தியுள்ளது. அத்துடன் ஜுலை மாதத்தில் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக