28 ஜூலை, 2010

சரக்கு விமானம் தீப்பிடித்தது






ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று இறங்கும் போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில், விமானம் முழுவதும் நாசமடைந்தது. விமானிகள் இரண்டு பேரும் தப்பித்து விட்டனர். ஜெர்மனியைச் சேர்ந்தது லுப்தான்சா விமான நிறுவனம். இந்நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. தரையிறங்கும் போதே அதில் திடீரென தீப்பிடித்தது. தரையிறங்கிய பின்னர் தீ மளமளவென்று பரவி, விமானம் இரண்டாக உடைந்தது. இச்சம்பவத்தில் விமானியும் துணை விமானியும் காயங்களுடன் தப்பித்தனர். அவர்கள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையப் பணியாளர்கள் அவசரமாகத் திரண்டு விமானத் தீயை அணைத்தனர். எனினும் விமானம் முற்றிலும் நாசமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக