29 ஜூலை, 2010

5 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு

இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மெதவல தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் யூ. ஏ. பி. மெதவலவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார்.

பிரிகேடியர்களான 52ஆவது படையணியின் முன்னாள் கட்டளைத் தளபதி எஸ். ஏ. ஏ. எல். பெரேரா, ஈ. கே. ஜே. கே. விஜேசிறி, வி. யூ. பி. நாணயக்கார, எம். எச். எஸ். பி. பெரேரா ஆகிய நால்வரும் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த் தப்பட்டுள்ளவர்களாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக