29 ஜூலை, 2010

மல்வத்த பீடாதிபதி, தியவதனநிலமே நேற்று வவுனியா விஜயம்



மல்வத்த பீடாதிபதியும், தலதா மாளிகையின் தியவதன நிலமேயும், நேற்று 28ம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்தனர்.

மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரும், தியவதன நிலமே நிலங்கதால பண்டாரவும் வவுனியா நகரில் நடைபெற்ற வைபவ மொன்றில் கலந்துகொள்வதற்காக வவுனி யாவுக்கு வருகை தந்தனர்.

வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இப்பிரதேசத்தில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள்.

இந்த வைபவத்தில் கண்டி, வவுனியா அரச அதிபர்கள் வன்னி பிராந்திய பாதுகாப்பு படைகளில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக