26 ஜூலை, 2010

பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது





ருகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யும்படியான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மாணவர்கள் 6 பேரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் போது நுகேகொடையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.

“ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 4 பேரும் மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது விளக்கமறியலில் உள்ளனர். நாம் இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம். இது எமது கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது” என உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக