28 நவம்பர், 2010

இலங்கையில் புனர்வாழ்வு பணிகள் திருப்தி அளிக்கிறதா?:கனிமொழி

இலங்கையில் தமிழர் புனரமைப்பு பணிகள் இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா என்று, கனிமொழி எம்.பி.,கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வீடு கட்ட மத்திய அரசு வழங்கியுள்ளள பணத்தை இலங்கை அரசு சரிவர பயன்படுத்தி வருகிறதா? அந்தப் பணிகள், இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா? இலங்கை தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13வது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளதா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரனீத் கவுர் அளித்துள்ள பதிலில்,

இலங்கையில் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், முகாம்களில் உள்ள அனைத்து தமிழர்களும் மீள்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.தமிழர் அமைப்புகள் மற்றும் பிறரையும் இணைத்து, அதிகார பரவல் குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு காண முயற்சி எடுப்பதாக உறூதியளித்ததாக இணையமைச்சர் பிரனீத் கவுர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக