29 நவம்பர், 2010

சிறுமி மீது பாலியல் வல்லுறவு : 62 வயது நபர் கைது


வாழச்சேனை நாசிவன் தீவு பகுதியில் எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயதுடைய நபரொருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக வாழச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரி எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

குறித்த சிறுமி வாழச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக