29 நவம்பர், 2010

குவைத்திலிருந்து நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இன்று இலங்கை வருகை

குவைத் நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இன்று இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களில் மேலும் 360 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர்கள் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இலங்கையைச் சேர்ந்த 2ஆயிரம் பேர் இவ்வாறு வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக