29 நவம்பர், 2010

சவூதி மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி: அமைச்சர் ராஜித

இலங்கை ஆழ்கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சவூதி அரேபிய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

''இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 400 சவூதி அரேபிய மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன் வகைகளில் 20 சதவீதத்தை இலங்கைக்கு வழங்க வேண்டும்.
இதுதொடர்பான ஒப்பந்தம் டிசம்பர் முதல் வாரமளவில் கைச்சாத்திடப்படவுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக