29 நவம்பர், 2010

வட மாகாண அபிவிருத்தி பற்றி ஆராய வவுனியாவில் 3 நாள் மாநாடு


வட மாகாணத்தின் முதலீடு, வளங்கள் தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு ‘உள்ளூராட்சி மாநாடும், கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரை மூன்று நாட்கள் வவுனியாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் போது வட மாகாண அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்டங்கள் தயாரிப்பது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக ஏசியன் பவுண்டேசன், ஜி. டி. இஸட் ஆகியன 200 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க வுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ள ‘உள்ளூர் மட்ட அபிவிருத்தி ஊடான தேசிய அபிவிருத்தி’ என்ற தொனிப் பொருளுக்கு அமைய இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியாவுக் கான உள்ளுராட்சிப் பிராந்திய உதவி ஆணையாளர் எஸ். அட்சுதன் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆரம்ப மற்றும் இறுதி நாள் வைபவங்கள் வவுனியா நகர சபை கலாசார மண்டபத் திலும் கண்காட்சி நகர சபை மைதானத்தி லும், பொருளாதார ஆளுகை என்ற மாநாடு கச்சேரி மாநாட்டு மண்படத்திலும் இடம்பெறவுள்ளன. தொழில்நுட்ப அறிமுகம், தகவல் பங்கீடு, கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி போன்ற துறையை மேம்படுத்துவது தொடர்பாக இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட வுள்ளது.

அபிவிருத்திக்கு தனியார் துறை, பொது மக்கள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளுதல் போன்றவையே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் எஸ். அட்சுதன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக