29 நவம்பர், 2010

கொரியன் குடாவில் பாரிய வெடியோசைகள் ; தீப்பிளம்புகள்

அமெரிக்கா, தென் கொரியா பயிற்சியை
ஆரம்பித்ததால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன



வட கொரியா மீது எத்தகைய தாக்குதல் கள் தொடுக்கப்பட்டாலும் அதன் எதிரொலி மிகக் கடுமையாக இருக்குமென வட கொரியா கடுமையான தொனியில் எச்சரித்தது. கொரியன் குடாவை நோக்கி அமெரிக்க தென்கொரிய இராணுவங்கள் முன்னேறிவரும் நிலையில் ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற மிகப் பெரிய போர்க்கப்பலும் களத்தில் இறங்கியுள்ளன.

இதில் விமான ஓடுபாதைகள் ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட நவீன இராணுவ, ஆயுத உபகரணங்களும் உள்ளன. வட கொரியாவை இலக்கு வைக்கும் தாக்குதல் திசையை நோக்கி ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற இந்தக் கப்பல் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில் தென் கொரிய, அமெரிக்க இராணுவங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நான்கு நாள் போர்ப்பயிற்சியை நேற்று ஆரம்பித்த மைக்கான ஆதாரமாக பாரிய வெடியோசை கள் விண்ணையும், மண்ணையும் அதிர வைத்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

வட, தென் கொரிய எல்லைகளிலுள்ள பொதுமக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களை நோக்கி நகர்ந்தனர். வானம் புகை மண்டலமாகவும் எங்கும் தீப்பிளம்புகளும் தென்பட்டதை இரண்டு எல்லைகளிலிருந்தும் பார்க்கக் கூடியதாக இருந்தது. வட கொரியா வானைமுட்டிச் சென்று தாக்கும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை கரை ஓரத்திற்குக் கொண்டுவந்தது.

அந்நாட்டு விமானங்களும் விண்ணில் வட்டமிட்டவண்ணமிருந்தன. தென் கொரியாவைப் பொறுமைகாக்குமாறு கோரும் பொருட்டு சீனாவின் வெளிநாட்டமைச்சர் அவசரமாகப் புறப்பட்டு நேற்று தென் கொரியத் தலைநகர் வந்தார்.

இவர் தென் கொரிய ஜனாதிபதியுடன் விரிவான பேச்சுக்களையும் நடத்தினார். ஆனால் நான்கு நாள் போர்ப்பயிற்சி ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறுமென்பதை தென்கொரியா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டாலும் பயிற்சிகளின் போது இராணுவ மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்படி சீன வெளிநாட்டமைச்சர் கேட்டுக்கொண்டார். சென்றவாரம் தென்கொரியா மீது வடகொரியா ஐம்பது ஏவுகணைகளை ஏவியது. இதனால் இந்த முறுகல் நிலையேற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக