27 நவம்பர், 2010

கொரிய தீபகற்பத்தில் போர் மேகம்: வடகொரியா மீண்டும் எச்சரிக்கை



தென் கொரியாவிற்கெதிராக எந் நேரத்திலும் போர் தொடுக்க தாம் தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

மேலும் அமெரிக்கப் படைகளுடனான தென்கொரியாவின் போர் ஒத்திகைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அது தெரிவித்துள்ளது.

75 போ‌ர் ‌விமான‌ங்க‌ள், 6000 படைவீரர்களுடன் ‌வீர‌ர்களுட‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் யு.எ‌‌ஸ்.எ‌ஸ் வொ‌‌ஷி‌ங்ட‌ன் எ‌ன்ற போ‌ர் க‌ப்ப‌ல் கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌திற்கு வருகைதந்துள்ளது.

அமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து அங்கு போ‌ர் ஒ‌த்‌திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றும் வட கொரியா 'யொங்பயொங்' தீவுகளின் மீது 2 ஆவது தடவையாகவும் ஆட்லறித்தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இதனைத்தொடர்ந்து வட கொ‌ரியா ‌மீது போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் கொ‌ரியாவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

தெ‌ன் கொ‌ரியா‌‌வி‌ன் 'யொங்பயொங்' ‌தீ‌வி‌ல் வட கொ‌ரியா அண்மையில் பீரங்கித்தாக்குதல்களை நடத்தியது இ‌தி‌ல் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

இத‌ற்கு ப‌‌திலடியாக தெ‌ன் கொ‌‌ரியாவு‌ம், வட கொ‌ரியா ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தியது.

மேலும் அவ்விடத்தில் வசித்த சுமார் 1200 பேர் அங்கிருந்து வெளியேறினர்.

அங்கு தொடரும் இப்பதற்ற சூழ்நிலையால் எந்நேரமும் போர் மூளும் அபாயம் நிலவுவதாக கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக