28 நவம்பர், 2010

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவரர் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரினை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்றுசனிக்கிழமை நடைபெற்றது. தற்போதய துணைவேந்தர் என்.சண்முகலிங்கள் உள்ளிட்ட 12 பேர் துணைவேந்தர் பதவிக்குவிண்ணப்பித்தனர்.

தெரிவு சபையில் இருந்து 21 பேர் தலா 3வாக்குகள் மூலம் வாக்களித்தனர்.இவர்களில் தற்போதய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பேராசிரியர் வசந்திஅரசரத்தினம், பெராசிரியர் ரட்ணஜீவன் ஹோல் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டு பதிவாளரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்யவுள்ளதுடன், அத்துணைவேந்தர் அடுத்த வருடத்தில் இருந்து புதிய துணைவேந்தராக பதவியேற்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக