27 நவம்பர், 2010

'ஈழமா? படிப்பா?" யாழ், பல்கலைக்கழகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள்

மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக 'ஈழமா? படிப்பா?" என்று வாசகமிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் விடுதிகளிலும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அச்சுவரொட்டிகளில் படிப்பா? ஈழமா? என்ற கேள்விக்குறியில் வீடுகள் எரிந்த நிலையிலான படங்களும், அழிவுகளின் படங்களும் காணப்பட்டன.

இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என போடப்பட்டிருந்தது. இருந்தும் இது யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தினால் ஒட்டப்படவில்லையெனவும் இனந்தெரியாத யாரோ ஒட்டியுள்ளனர் என்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக