29 நவம்பர், 2010

பல பகுதிகளிலும் கடும் மழை: 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு யாழ்., மன்னார், கற்பிட்டி, சிலாபம் பகுதிகளில் வெள்ளம்


நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக 8646 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இம்மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 101 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 21 வீடுகளும் பகுதியாக சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளர் கூறினார். யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1283 குடும்பங்கள் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், இம்மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 1231 குடும்பங்களைச் சேர்ந்த 6164 பேரும், மன்னார் மாவட்டத்தில் 5855 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 680 பேரும், யாழ். மாவட்டத்தில் 1354 குடும்பங்களைச் சேர்ந்த 4988 பேரும், மொனறாகலை மாவட்டத்தில் 82 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேரும், வவுனியா மாவட்டத்தில் மெனிக்பாமில் 47 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 77 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

இம்மழையினால் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் பிரதேச செயலகப் பிரிவில் 803 குடும்பங்களைச் சேர்ந்த 4764 பேரும், கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேரும், நவகத்தேகம பிரதேச செயலகப்பிரிவில் 292 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேரும், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேரும் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப்பிரிவில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3930 பேரும், மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 2183 குடும்பங்களைச் சேர்ந்த 9485 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும், மடு பிரதேச செயலகப் பிரிவில் 2015 குடும்பங்களைச் சேர்ந்த 7562 பேரும், யாழ். பிரதேச செயலகப் பிரிவில் 670 குடும்பங்களைச் சேர்ந்த 2504 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக