28 ஏப்ரல், 2011

பாராளுமன்றம் 35 நிமிடங்களில் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வு நேற்றைய தினம் 35 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நான்கு சட்ட மூலங்கள் பிற்போடப்பட்டதால் 35 நிமிடங்களுக்குள் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குப் பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் கூடியது. ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்ட மூலம் உட்பட நான்கு சட்ட மூலங்கள் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்தன. எனினும் ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மேற்படி நான்கு சட்ட மூலங்களும் விவாதத்துக்கு எடுத் துக் கொள்ளப்படாமல் ஒத்திப் போடப்பட்டன. இதன் காரணமாகவே நேற்றைய சபை அமர்வு 1.35 மணியுடன் நிறைவு பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக