28 ஏப்ரல், 2011

4 எயார் பஸ் விமானங்கள் டிசம்பருக்குள் கொள்வனவு முதல் விமானம் அடுத்த மாதம்




ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறு வனங்களுக்கு மேலும் நான்கு புதிய எயார் பஸ் விமானங் கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் கொள் வனவு செய்யப்படும்.

இதன் மூலம் இவ்விரு விமான நிறுவனங்களுக்கு இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்தார்.

இந்த நான்கு புதிய எயார் பஸ் விமா னங்களில் முதலாவது விமானம் அடுத்த மாதம் இங்கு வந்து சேரும். எஞ்சிய விமானங்கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் இலங்கைக்கு வந்து சேரும். சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஆசியாவிலுள்ள விமான நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் முதல் தரத்திற்கு உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

இதே வேளையில் எமது நாட்டின் விமான நிலையங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படும். ஹம்பாந்தோட்டையில் மத்தளயில் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார். மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் 209 மில்லியன் டொலர்களை செலவிட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக